பிரித்தானியா இலங்கைத் தூதரகத்திற்கு முன் தமிழர்கள் போராட்டம்
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன் இன்று(04.02.2025) ஆரம்பமான கரிநாள் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடினர்.

சிங்கள அரச தூதரகத்தின் முன் வானுயர ஒலித்திக்கொண்டிருக்கும் கொட்டொலிகள் மத்தியில் மாபெரும் போராட்டம் ஆரம்பித்தது.இப்போராட்டம் பிரித்தானிய மன்னர் மாளிகை நோக்கி நகர்ந்தது.

தமிழர் தாயகத்தில் கரிநாளான இன்று எழுச்சிகொண்ட மக்கள் போராட்டங்களை இலங்கை அரசு நசுக்க முற்பட்ட வேளையிலும் தடைகளை உடைத்து போராட்டங்கள் நடைபெற்றது.
Share this content:
Post Comment